பணத்திற்காக விஷ ஊசி செலுத்தி கால் டாக்ஸி ஓட்டுநரை கொலை செய்த தம்பதி.. <!– பணத்திற்காக விஷ ஊசி செலுத்தி கால் டாக்ஸி ஓட்டுநரை கொலை செ… –>

கோவை மாவட்டம் வடவள்ளியில் பணத்திற்காக விஷ ஊசி செலுத்தி கால் டாக்ஸி ஓட்டுனரை கொலை செய்த தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.

ஓணாப்பாளையம் பகுதியைச் சேர்ந்த  தனியார் டாக்சி ஓட்டுனர் சனு என்பவர் கடந்த 9ந்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர்.

அதன் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் தொண்டாமுத்தூரைச் சேர்ந்த ஸ்டீபன் மற்றும் அவரது மனைவி அமலோற்பவத்தை கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் பணத்திற்காக சனுவினை மரத்தடியால் அடித்தும், விஷ ஊசி போட்டும் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

அவர்களிடம் இருந்து கொலை செய்ய பயன்படுத்திய மரத்தடி, 6100 ரூபாய் பணம், லேப்டாப் ,20 க்கும் மேற்பட்ட செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.