கர்நாடகாவில் திருமண வரவேற்பில் மூளைச்சாவு ஏற்பட்டு மணமகள் உயிரிழப்பு.. அவரது உடலுறுப்புகளை தானமாக வழங்கிய பெற்றோர்.! <!– கர்நாடகாவில் திருமண வரவேற்பில் மூளைச்சாவு ஏற்பட்டு மணமகள்… –>

கர்நாடகாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது மூளைச்சாவு ஏற்பட்டு மணமகள் உயிரிழந்த நிலையில், அவரது உடலுறுப்புகளை பெற்றோர் தானமாக வழங்கியுள்ளனர்.

கோலார் அடுத்த சீனிவாசப்பூரைச் சேர்ந்த சைத்ரா என்ற அந்தப் பெண்ணுக்கு கடந்த 7ஆம் தேதி காலை திருமணம் நடைபெறவிருந்தது. முந்தைய நாளான 6ஆம் தேதி மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

உறவினர் ஒவ்வொருவராகச் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தபோதே திடீரென சைத்ரா மேடையிலேயே மயங்கி விழுந்துள்ளார்.இதைப்பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளைச்சாவு காரணமாக உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனர். இதைக்கேட்டு அவரது பெற்றோர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களின் நெஞ்சை உலுக்கியது. திருமண நாளன்று மகள் இறந்த துக்கத்திலும் அவரின் பெற்றோர் மகளின் உடல் உறுப்புகளை மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர்.

இதுபற்றி அறிந்த கர்நாடக அமைச்சர், “சைத்ராவுக்கு இது மிகவும் முக்கியமான நாள். ஆனால் விதி வேறு மாதிரியாக நினைத்துவிட்டது. இதயத்தை நொறுக்கும் இந்த சோகத்திலும் அவரது பெற்றோர்கள் உடலுறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளனர்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.