தடுப்பூசி முகாம் ரத்து – தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்.!

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நாளில் தமிழகத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் கலந்து கொண்டு பொதுமக்கள் பலரும் தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டு இருக்கின்றனர். 

இந்த முகாமில் இரண்டு தவணை தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பு ஊசிகள் செலுத்தப்படுகின்றன. வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் எதிர்கட்சிகள், ஆளும் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வீடு வீடாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய நிலையில் இந்த நகர்ப்புற தேர்தல் காரணமாக வரும் 19ஆம் தேதி சனிக்கிழமை நாளில் நடைபெற இருந்த தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.