திமுகவில் மீண்டும் இணைந்தார் கு.க.செல்வம்

KK Selvam joins DMK again: திமுகவிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., கு.க.செல்வம் இன்று மீண்டும் திமுகவில் சேர்ந்துள்ளார்.

திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களில் மிக முக்கியமானவராக இருந்தவர் கு.க.செல்வம். மேலும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். திமுகவில் தலைமை நிலைய அலுவலகச் செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தவர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவாகவும் இருந்தவர்.

இந்நிலையில், திமுக மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் கு.க.செல்வம். சுமார் இரண்டு ஆண்டுகளாக பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்த கு.க. செல்வம், திடீரென இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து அவர் முன்னிலையில் மீண்டும் திமுகவில் இணைந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கு.க.செல்வம், தமிழகத்தை பாஜக தொடர்ந்து புறக்கணித்து வந்ததால் அக்கட்சியை விட்டு விலகியதாக கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.