தூக்கில் பிணமாக தொங்கிய மாணவி.. காவல்துறையினர் விசாரணை..!

16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை கீரைத்துறை பகுதியை சேர்ந்தவர் பாலு . இவரது மகள் முத்துலட்சுமி (16) அந்த பகுதியில் உள்ள கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சம்பவதன்று அவரது தந்தை வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டின் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கல் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அவர் தூக்கில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது, விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.