வேலூரில் ஏ.டி.எம். எந்திரங்களை வேண்டுமென்றே பழுதடையச் செய்யும் விசித்திர நபரை தேடி வரும் போலீசார்.! <!– வேலூரில் ஏ.டி.எம். எந்திரங்களை வேண்டுமென்றே பழுதடையச் செய… –>

வேலூர் மாவட்டம் காட்பாடியில், ஒட்டுவதற்கு பயன்படுத்தும் பசையை தடவி, வேண்டுமென்றே ஏ.டி.எம். எந்திரங்களை பழுதடையச் செய்யும் விசித்திர ஆசாமியை போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர்.

அங்கு ஏ.டி.எம். இயந்திரங்கள் அடிக்கடி பழுதானதை அடுத்து, வங்கி அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, பேண்ட், சர்ட் போட்டு வாடிக்கையாளர் போல் ஏ.டி.எம். மையத்திற்கு வரும் அந்த நபர், தாம் கையில் கொண்டு ஏ.டி.எம்,. கார்டில் பசையை தடவி அதனை எந்திரத்திற்குள் செலுத்துகிறார்.

சிறிது நேரத்தில் ஏ.டி.எம் எந்திரம் பழுதடைந்து விடவே, அந்த நபர் அங்கிருந்து சென்று விடுகிறார். அடுத்து வரும் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். கார்டை உட்செலுத்தும் போது, பணம் எடுக்க முடியாத நிலையும், ஏ.டி.எம்.ஐ எந்திரத்தை பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்படுகிறது.

இதேபோன்று சுமார் 12 ஏ.டி.எம். எந்திரங்களை அந்த நபர் பழுதடையச் செய்திருக்கிறார். சம்பந்தப்பட்ட நபரை பிடித்தால் தான் இதற்கான காரணம் தெரியவரும் எனவும் போலீசார் கூறியிருக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.