IPL Auction 2022: ரூ.5 கோடிக்கு அஸ்வினை தூக்கியது ராஜஸ்தான், 8.25 கோடிக்கு விலைபோனார் தவான்…

பெங்களூரு: ஐ.பி.எல். 2022) கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில்  காலை 11மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த மெகா ஏலத்தில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

முதல்கட்டமாக தமிழ்நாட்டு வீரர் அஸ்வினை ரூ.5 கோடிக்கு  ராஜஸ்தான் அணி வாங்கியது. அதிக பட்சமாக ஷிகன் தவான்,  8.25 கோடிக்கு பஞ்சாபஸ் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.

ஏலப்பட்டியல் 590 வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இறுதி செய்துள்ளது. இதில், 370 இந்திய வீரர்களும், 270 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.  வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடி, ரூ.1½ கோடி, ரூ.1 கோடி, 75 லட்சம், 50 லட்சம், 40 லட்சம், 30 லட்சம், 20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு 46 வீரர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது.

இன்று ஏலம் தொடங்கியதும், முதல் வீரராக இந்திய வீரர்  ஷிகர் தவான் பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ஷிகர் தவானுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 2 கோடிக்கு ஏலத்தைத் தொடங்கியது, பின்னர் டெல்லி கேப்பிட்டல்ஸ் குதித்தது. இரண்டிற்கும் இடையே ஏலம் முன்னும் பின்னுமாக சென்றது. தவானின் ஏலம் 5 கோடியைத் தாண்டியதால் RR மற்றும் DC இரண்டும் பின்வாங்கின. இறுதியில் நுழைந்த பஞ்சாப் கிங்ஸ் ஏலத்தில் அவரை 8.25 கோடிக்கு வாங்கியது.

அதையடுத்து தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழல்பந்துவீச்சாளர் அஸ்வினை ராஜஸ்தான் ராயல்ஸ் 5 கோடிக்கு வாங்கியது.  தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சிஎஸ்கே அணிக்கு வர விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், சிஎஸ்கே அணி அவரை எடுக்காத நிலையில், , ₹5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது. அஸ்வினை எடக்க  டெல்லி மற்றும் ராஜஸ்தான் இடையே சில கடுமையான போட்டி நடந்த நிலையில் இறுதியாக  5 கோடிக்கு அஸ்வினை ராஜஸ்தான் ராயல்ஸ்தூக்கியது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.