ஊட்டி: கோடை சீசன் நெருங்கிய நிலையில், தாவரவியல் பூங்காவில் பராமரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கும். இச்சமயங்களில் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். அதில், பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும். அதுமட்டுமின்றி, தொட்டிகளிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அவைகள் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வார்கள். மேலும், மே மாதம் மலர் கண்காட்சி நடத்தப்படும். கோடை சீசன் துவங்க இன்னும் ஒன்றரை மாதமே உள்ள நிலையில், தற்போது பூங்காவை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூங்காவில் உள்ள தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் செடிகள் பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நாள் தோறும், தொட்டிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணிகள், உரமிடும் பணிகள் போன்றவைகளை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ேமலும், உறைபனியில் மலர் செடிகள் காய்ந்து விடாமல் இருக்க ேகாத்தகிரி மிலார் செடிகள் கொண்டு பாதுகாத்தும் வருகின்றனர்.
