ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு

காபுல்,
ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இது தொடர்பாக, புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் இருந்து கிழக்கு வடகிழக்கே 164 கிலோமீட்டர் தூதரத்தில் நேற்று இரவு 11.34 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

140 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் வீடு, கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் பொருள்சேதம், உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.