உண்மையை உறுதிசெய்துகொள்ளாமல் தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்கள் புண்படுத்தும்படி உள்ளது-மேற்குவங்க ஆளுநர் <!– உண்மையை உறுதிசெய்துகொள்ளாமல் தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவி… –>

மேற்குவங்கச் சட்டப்பேரவை முடக்கம் பற்றி உண்மை அறியாமல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்து, மனதை புண்படுத்துவதாக ஆளுநர் ஜெகதீப் தங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் டுவிட்டரில் வெளியிட்ட கருத்துக்குப் பதிலளித்துள்ள மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர், முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே சட்டமன்றத்தை முடக்கியதாகத் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற முடக்கம் குறித்து முடிவெடுத்த தொடர்செயல்பாடுகளையும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதுமான தகவல் இல்லாமல் நிகழ்வுகள் குறித்து அவசரமாகக் கருத்துத் தெரிவிப்பதை இது காட்டுவதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.