பிப்ரவரி 20 பொது விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு மாநில அரசு செக்!

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணி்ப்பூர், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதி்ல் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு பிப்ரவரி 10 ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், கோவா மாநிலத்துக்கு 14 ஆம் தேதியும், பஞ்சாப் மாநிலத்துக்கு 20 ஆம் தேதியும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தினத்தில் அனைத்து தரப்பு மக்களும் வாக்களிக்க வசதியாக அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன்கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று
பஞ்சாப் மாநில அரசு
உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பிப்ரவரி 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் வாக்களிக்க வசதியாக, மாநிலம் முழுவதும் உள்ள அரசுசாரா மற்றும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன்கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது.

பிப்.,14ஆம் தேதி விடுமுறை: மாநில அரசு அறிவிப்பு!

வணிகம், வர்த்தகம், தொழில் நிறுவனங்கள் என அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 20 ஆம் தேதி வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்றாலும், அன்றைய தினமும் தனியார் வர்த்தக நிறுவனங்கள் செயல்படும் என்பதை கருத்தில் கொண்டு பஞ்சாப் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னதாக, வாக்குப்பதிவு நாளான பிப்ரவரி 14 ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுவதாக கோவா மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.