பேருந்து நிலையம் அருகிலேயே ஆட்டோ நிறுத்தம் அமைக்க வேண்டும்.. செல்போன் டவர் மீது ஏறி ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி..!

செல்போன் டவர் மீது ஏறி ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளகுறிச்சி மாவட்டம், கண்டாச்சிபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் . ஆட்டோ டிரைவரான இவர் கண்டாச்சிபுரம் பேருந்து நிலையம் அருகே தனது ஆட்டோவை நிறுத்தியிருக்கிறார்.  இது போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி காவலர்கள் ஆட்டோவை நிறுத்த கூடாது என சொல்லியுள்ளனர்.

இதனால், காவலருக்கும் செந்தில்குமாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த அவர் கடைவீதியில் உள்ள பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் மீது ஏறி பேருந்து நிலையம் அருகே செல்போன் கோபுரம் நிரந்தரமாக அமைக்க கோரிக்கை வைத்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார்.

அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்ட காவலர்கள் அவரை சமாதனாப்படுத்தி கீழே இறங்கி வர வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.