மீண்டும் முழு ஊரடங்கு – அரசு எடுக்கப் போகும் முடிவு!

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில்,
சீனா
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. இந்த சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியது. கடந்த சில மாதங்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா பரவியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 39 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், 28 பேர் வெளிநாடு பயணம் மேற்கொள்ளாதவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. அந்த வகையில் 34 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு – அரசு திடீர் விளக்கத்தால் பரபரப்பு!

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த சீன அரசு அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.