வண்டலூர் பூங்காவில் திருடு போன அணில் குரங்குகள் மீட்பு – 4 பேர் கைது

சென்னை வண்டலூர் பூங்காவில் 2 ஆண் அணில் குரங்குகளை திருடிய பூங்கா ஊழியர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரிய வகை உயிரினமான 2 அணில் குரங்குகள் கடந்த 8-ம் தேதி காணாமல் போயின. இது தொடர்பாக ஓட்டேரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதில், பூங்காவின் ஒப்பந்த ஊழியரான சத்தியவேல் என்பவர், அவரது நண்பர் ஜானகிராமனுடன் சேர்ந்து, கூண்டு கம்பிகளை அறுத்து அணில் குரங்கை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
image
இதனை தொடர்ந்து, லோகநாதன் என்பவர் மூலம் வினோத் என்பவரிடம் 4 லட்சம் ரூபாய்க்கு குரங்கு விற்கப்பட்டதும் அம்பலமானது. 4 பேரையும் கைது செய்த தனிப்படையினர், அணில் குரங்குகளை பத்திரமாக மீட்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.