#BREAKING : ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது.!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 12 பேரையும், 2 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.

தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீனவர்களின் 2 விசைப் படகுகளையும் அதில் இருந்த 12 மீனவர்களையும் சிறைபிடித்துள்ளது. அதனை தொடர்ந்து இவர்கள் விசாரணைக்காக மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்தில்தான் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 11 பேரையும் மூன்று விசைப் படகுகளையும் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 9ஆம் தேதி இருந்து மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ரயில் மறியல் போராட்டம் நடத்த முயற்சி செய்தனர்.

இந்த நிலையில் நேற்று மூன்று நாட்கள் கழித்து மீண்டும் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.