IPL ஏலத்தில் CSKவை கலாய்த்து தள்ளிய டெல்லி அணி: CSKவிற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள்


நேற்று நடந்த IPL ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாட்டை கிண்டல் செய்யும் விதமாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

2022ம் ஆண்டுக்கான ipl வீரர்கள் மெகா ஏலம் நேற்று பெங்களுருவில் தொடங்கியது. முதல் நாள் நடத்த பட்ட ஏலத்தில் அதிகப்பட்சமாக இஷான் கிஷான் 15.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அதனை தொடர்ந்து தீபக் சஹார் 14 கோடிக்கு சென்னை அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

இது ஒரு புறம் இருக்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகள் கடந்த ஆண்டு அவர்கள் அணியில் விளையாடிய அதே வீரர்களையே மீண்டும் ஏலத்தில் எடுத்துள்ளது. உதாரணமாக கடந்த சீசனில் சென்னை அணிக்காக விளையாடிய பிராவோ, உத்தப்பா, அம்பத்தி ராயுடு, தீபக் சாஹர், ஆசிப் உள்ளிட்ட வீரர்களைத் தான், மீண்டும் இந்த ஏலத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்துள்ளது.

இந்த ஆண்டு IPLல் புதிய அணியுடன் புதுப்பொலிவுடன் களமிறங்குவோம் என்று எதிர்பாத்துக்கொண்டு இருந்த சென்னை ரசிகர்களுக்கு இந்த வித்தியாசமான முடிவு சி.எஸ்.கே ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் சி.எஸ்.கே அணியின் வீரர்கள் தேர்வை குறித்து கிண்டல் செய்யும் விதமாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் எதுவுமே மாறவில்லை. எல்லாம் அப்படியே தான் இருக்கிறது’ என ஏலத்திற்கு பிறகு, சிஎஸ்கே அணி குறிப்பிட்டு ஹிந்தியில் மீம்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளது.

இது தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. அதேசமயம் சென்னை அணி ரசிகர்கள் தங்களின் அணிக்கு ஆதரவாக சில கருத்துக்களைத் தெரிவித்தும் வருகின்றனர்.





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.