உச்சகட்ட போர் பதற்றம் – மறு உத்தரவு வரும் வரை விமானங்கள் ரத்து!

கே.எல்.எம். விமான நிறுவனம் உக்ரைன் நாட்டிற்கான அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது.

சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி, கலாச்சார அடையாளத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப் போவதால் உக்ரைனை
ரஷ்யா
தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது. ஆனால், அந்த நாட்டு மக்களோ தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்த விரும்புகின்றனர்.

இந்நிலையில் ‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது. இரு நாடுகளின் எல்லைகளில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. உக்ரைனில் உச்சகட்ட பதற்றம் நிலவுவதை தொடர்ந்து அமெரிக்கா தனது மக்களை உக்ரைனை விட்டு உடனே வெளியேறுமாறு அறிவுறுத்திய நிலையில், இஸ்ரேலும் தன் குடிமக்களை அவசரமாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் முழு ஊரடங்கு – அரசு எடுக்கப் போகும் முடிவு!

இந்நிலையில், நெதர்லாந்தை தளமாகக் கொண்ட கே.எல்.எம். விமான நிறுவனம் உக்ரைன் நாட்டிற்கான அனைத்து விமானங்களையும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்துள்ளது. முன்னதாக உக்ரைன் நாட்டில் இருந்து வெளியேறும்படி தனது நாட்டு மக்களுக்கு நெதர்லாந்து அரசு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.