சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீப் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதை அடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஷ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, மூத்த நீதிபதியாக உள்ளதால் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்டார். அவரை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க, உச்ச நீதிமன்ற கொலிஜியம், குடியரசு தலைவருக்கு பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்ற குடியரசு தலைவர், கடந்த வாரம் நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று காலை 10 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முனீஸ்வரர்நாத் பண்டாரி பதவி எற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
டெல்லிக்கு வெளியே விரைவில் சந்திப்பு: முதல்வர் ஸ்டாலின் தகவல்!
அப்போது, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு புத்தகம் வழங்கி
முதல்வர் ஸ்டாலின்
வாழ்த்துகளை தெரிவித்தார். ’கீழடி’ தொடர்பான தமிழக அரசின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு நூலை தலைமை நீதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசாக அளித்தார்.
கீழடி
நூல் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.