தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு- இன்று 1,634 பேருக்கு தொற்று

சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,634 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்றைய பாதிப்பு 2,296 ஆக இருந்த நிலையில் இன்று 2000-க்கும் கீழ் குறைந்துள்ளது.
மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 37 ஆயிரத்து 896 ஆக அதிகரித்துள்ளது. 
சென்னையில் இன்று 341 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கோவையில் 305 பேருக்கும், செங்கல்பட்டில் 116 பேருக்கும், திருப்பூரில் 93 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் 7,365 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 64 ஆயிரத்து 13 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 37,932 ஆக உயர்ந்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.