கடலில் குளித்த இளைஞர்கள் இருவரை இழுத்துச் சென்ற அலை.. நண்பர்களின் உதவியுடன் காப்பாற்றிய காவலர் <!– கடலில் குளித்த இளைஞர்கள் இருவரை இழுத்துச் சென்ற அலை.. நண்… –>

புதுச்சேரியில் கடலில் குளித்தபோது ராட்சத அலையால் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் இருவரை காவலர் ஒருவர் துணிந்து காப்பாற்றினார்.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விஷ்ணு, சபரிஷ் என்ற இளைஞர்கள் நண்பர் திருமணத்தில் பங்கேற்பதற்காக புதுச்சேரி சென்றுள்ளனர். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மேலும் சில நண்பர்களுடன் தலைமைச் செயலகம் எதிரேயுள்ள கடல் பகுதியில் குளித்துள்ளனர்.

அப்போது இருவரையும் ராட்சத அலை ஒன்று இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. உடன் சென்ற நண்பர்கள் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் படை காவலர் சவுந்தரராஜனை உதவிக்கு அழைத்தனர்.

சீருடையோடு கடலில் இறங்கிய சவுந்திரராஜன், இளைஞர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.