கனடா – அமெரிக்கா நாடுகளை இணைக்கும் பாலம் மீண்டும் திறப்பு

விண்ட்சர் : போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, கனடாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.
வட அமெரிக்க நாடான கனடாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதை எதிர்த்து நாடு முழுதும் பல இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கனடா நாட்டின் விண்ட்சர் நகரையும், அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரையும் இணைக்கும் பாலத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் ஏராளமானோர் திரண்டனர். இதைஅடுத்து, அந்த மேம்பாலம் மூடப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.போலீசார் சமரசம் பேசியும் பலன் இல்லாததால், போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.இதையடுத்து, கனடா மற்றும் அமெரிக்காவை இணைக்கும் மேம்பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.