சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிகரித்த நிவாரண கொடுப்பனவு

சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிகரித்த நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் இன்று (14) உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.அல் அமீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.எ.அஸீஸ்,  பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஏ.ஏ.நாஸர்,பி.எம்.காசிம் கலந்து கொண்டனர்.

இப் பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட மாஞ்சோலை 207யு சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிகரித்த சமுர்த்தி கொடுபுப்பனவும் இன்று வழங்கப்பட்டது.

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். நியாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் கலந்து கொண்டதுடன் ,பொருளாதார அபிவிருத்தித் உத்தியோகத்தர் பி.எம்.நூறுதீன்,சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் எம்.என்.எம்.சாஜஹான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.