சிறுவர்களை யாசகம் பெறுவதில் ஈடுபடுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை

சிறுவர்களை யாசகம் பெறுவதில் ஈடுபடுத்தப்படுவதை ,தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் ஆதரவும் இன்றியமையாதது என்று மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

சிலர் தமது குழந்தைகளையும் வைத்துக் கொண்டு வீதிகளில் யாசகம் பெறுவதை தற்போது காணக்கூடியதாக உள்ளது. இதுபோன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு யாசகம் பெறுபவர்களுக்கு எதிராக பொறுப்பானவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

மேலும், இது தொடர்பான சட்ட நிலைமைகள் குறித்து நீதி அமைச்சருடன் கலந்துரையாடிய தாகவும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.