சேலத்தில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சாலையோரம் பள்ளத்தில் விழுந்து பலி.! <!– சேலத்தில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சால… –>

சேலத்தில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், சாலையோரம் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் வாகனத்துடன் விழுந்து பலியானார்.

சேலம் 5 ரோடு ஏவிஆர் ரவுண்டானா பகுதியில் அதிகாலையில் நடைபயிற்சி சென்ற சிலர், சாலையோரம் எரிவாயு குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பதை பார்த்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

போலீசாரின் விசாரணையில் அவர் பெயர் சிவா என்பதும் தனியார் கொரியர் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. அப்பகுதி ஒருவழிப்பாதை என்று கூறும் போலீசார், பணி முடிந்து நள்ளிரவில் சிவா அதிவேகமாக வந்து பள்ளத்தை கவனிக்காமல் விழுந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.

பள்ளத்தின் அருகே எச்சரிக்கைக்காக “டிராஃபிக் கோன்கள்” வைக்கப்பட்டிருந்ததாகக் கூறும் போலீசார், சிவா மது அருந்திவிட்டு நிதானமின்றி வந்தாரா என்பது பிரேதப் பரிசோதனைக்குப் பின்பே தெரியவரும் என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.