தாக்குதல் நடத்த தயாராக இருக்கிறோம்! வெளிநாடுகளுக்கு ரஷ்ய எச்சரிக்கை



 கடல் எல்லைக்குள் நுழையும் வெளிநாட்டுக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ரஷ்யா தயாராக இருப்பதாக மூத்த ரஷ்ய இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்யா அதன் படைகளை குவித்துள்ளதால், இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது.

இதனிடையே, சனிக்கிழமை அன்று பசிபிக் கடலில் தங்கள் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலை ரஷ்ய கடற்படைக் கப்பல் விரட்டியடித்ததாக ரஷ்யா கூறியது.

இதைத் தொடர்ந்து, ரஷ்யாவின் கடல் பகுதியில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அமெரிக்கா மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில், ரஷ்ய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழையும் வெளிநாட்டுக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தயாராக இருப்பதாக மூத்த ரஷ்ய இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அத்தகைய முடிவு உயர் மட்டத்தில் மட்டுமே எடுக்கப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.