பெரும் நெருடிக்கடியில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்! விரைவில் எரிபொருளுக்கு நெருக்கடி?



இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்ட நட்டத்தினால் டொலர்களைப் பெறுவதற்கு ரூபா கிடைக்காததால் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

டொலர் பற்றாக்குறையினால் எதிர்காலத்தில் நாட்டிற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதில் கூட்டுத்தாபனம் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்திற்கொண்டு நிவாரணம் வழங்குமாறு அல்லது எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எரிபொருள் விலையை அப்படியே பேணுவதன் மூலம் தமக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.