வழிப்பறி செய்ய முயன்று இளைஞரின் தலையை துண்டித்த கும்பல் ; தலையைத் தேடும் போலீசார் <!– வழிப்பறி செய்ய முயன்று இளைஞரின் தலையை துண்டித்த கும்பல் ;… –>

திருப்பூரில் நண்பர்கள் இருவரிடம் வழிப்பறி செய்ய முயன்ற கும்பல், அவர்களில் ஒருவரின் தலையைத் துண்டித்து கொலை செய்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

செரங்காடு பகுதியில் நள்ளிரவு 12 மணியளவில் இளைஞர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் கூச்சலிட்டபடியே ஓடி வந்துள்ளார். அப்பகுதி மக்கள் விசாரித்தபோது தன்னுடன் வந்த நண்பர் சதீஷ் என்பவரை ஒரு கும்பல் அங்குள்ள காலி மைதானத்தில் வைத்து தாக்கிக் கொண்டு இருப்பதாகக் கூறியுள்ளார்.

பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது, தலை துண்டிக்கப்பட்ட சதீஷின் உடல் மட்டும் கிடந்துள்ளது. போலீசாரின் விசாரணையில் காயமடைந்த நபரின் பெயர் ரஞ்சித் என்பது தெரியவந்தது.

அப்பகுதியிலுள்ள பனியன் நிறுவனத்தில் இருவரும் பணியாற்றி வந்ததாகவும் நள்ளிரவில் சாலையில் நடந்து வந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் வழிப்பறி செய்ய முயன்றதாகவும் அவர்களிடமிருந்து காயங்களுடன் தாம் தப்பிவிட்டதாகவும் ரஞ்சித் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.