விவாகரத்து வேணும்பா: ரஜினியிடம் ஒரே நேரத்தில் சொன்ன ஐஸ்வர்யா, சவுந்தர்யா

தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் ஆசை, ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது பிரிந்துவிட்டார்கள். 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த அவர்கள் பிரிந்ததால் திரையுலகினருக்கு அதிர்ச்சியே இல்லையாம். எல்லாம் எதிர்பார்த்தது தான் என்கிறார்கள்.

முன்னதாக சவுந்தர்யா தன் முதல் கணவரை விவாகரத்து செய்தபோதே தனக்கும் விவாகரத்து வேண்டும் என்று கேட்டாராம் ஐஸ்வர்யா. அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த
ரஜினிகாந்த்
, மகன்களுக்காக நீ தனுஷுடன் தான் இருக்கணும் என்று சமாதானம் செய்து வைத்தாராம்.

அப்பா பேச்சை கேட்டு விவாகரத்து முடிவை அப்பொழுது கைவிட்டாராம் ஐஸ்வர்யா. ஒரே நேரத்தில் தன் இரண்டு மகள்களும் விவாகரத்து முடிவை எடுத்ததால் ரஜினி அதிர்ந்துவிட்டாராம்.

Dhanush:கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்த தனுஷ், ஐஸ்வர்யா: ரஜினி ‘ஷாக்’
அப்பா சொன்னதால் மனதை மாற்றிக் கொண்டாலும் ஐஸ்வர்யா சந்தோஷமாக இல்லையாம். கடந்த 6 ஆண்டுகளாக அவருக்கும், தனுஷுக்கும் இடையே பிரச்சனை தானாம்.

பிரச்சனை ஏற்படும்போது எல்லாம் புதுப்படத்தில் கமிட்டாகி ஷூட்டிங்கிற்கு சென்றுவிடுவாராம்
தனுஷ்
. அப்படியாவது வீட்டில் இருக்க வேண்டாமே என்று தான். இப்படி பல ஆண்டுகளாக இருந்த பிரச்சனை பெரிதாகி வெடித்து தான் பிரிந்துவிட்டார்களாம்.

ஐஸ்வர்யாவுடன் இனி சேர்ந்து வாழும் பேச்சுக்கே இடமில்லை என்கிற முடிவில் இருக்கிறாராம் தனுஷ். இந்த விஷயத்தில் என் மனதை மாற்ற யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்கிறாராம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.