Dhanush:ரஜினி இப்போ செய்வதை அன்றே செய்த தனுஷ், ஐஸ்வர்யா

தனுஷும், ஐஸ்வர்யாவும் தாங்கள் பிரிவதாக ஜனவரி 17ம் தேதி அறிவிப்பு வெளியிட்டதில் இருந்தே சமூக வலைதளங்களில் அது பற்றி தான் பேச்சாக உள்ளது.

அவர்கள் மீண்டும் சேர்வார்களா, மாட்டார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளாகவே பிரச்சனையாக இருந்ததாம். பிரச்சனை ஏற்பட்டதுமே பிரிந்து சென்றுவிடாமல் அதை தீர்க்க இத்தனை ஆண்டுகளாக முயற்சி செய்திருக்கிறார்கள்.

அந்த முயற்சியில் தோல்வி அடைந்துவிட்டார்கள். பெயருக்கு கணவன், மனைவியாக வாழ்ந்து என்ன பயன் என்று தான் இறுதியில் பிரிவு முடிவை எடுத்தார்களாம்.

அவர்களே பிரச்சனையை தீர்க்க முயன்று தோல்வி அடைந்த நிலையில் தற்போது ரஜினி அவர்களை சமாதானம் செய்ய முயற்சி செய்து வருகிறார். தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.

என்னை தேடி வந்த ‘முசாபிர்’, இந்த கனெக்ஷன் தப்பாகாது: ஐஸ்வர்யா
ரஜினியின் முயற்சி வெற்றி அடைய வாய்ப்புகள் மிக மிக குறைவு என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். முன்னதாக ஐஸ்வர்யாவுடன் பிரச்சனை ஏற்பட்டபோது எல்லாம் புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வந்திருக்கிறார்
தனுஷ்
.

அப்படியாவது வீட்டில் இல்லாமல் வெளியே இருக்கலாம். மேலும் தன் கவனத்தை திசை திருப்பலாம் என்று அப்படி செய்திருக்கிறார். இந்நிலையில் ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகும் அதையே தான் செய்து கொண்டிருக்கிறார். அதாவது கவனத்தை திசை திருப்ப புதுப்படங்களில் நடிக்க ஒப்புக் கொள்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.