கொஞ்ச நாள் எனக்கு போன் பண்ணாத : பிரபல நடிகையிடம் தனுஷ்..!

நடிகர்
தனுஷ்
மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து செய்தி அனைவரும் அறிந்ததே. காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் பதினெட்டு ஆண்டு சேர்ந்து வாழ்ந்துவிட்டு தற்போது பிரிவதாக அறிவித்தனர். இந்த செய்தியால் பலரும் அதிர்ந்தனர்.

மேலும் இவர்களின் பிரிவிற்கு உண்மையான காரணம் தெரியாமல் சிலரோ இஷ்டத்திற்கு ஒரு காரணத்தை சமூகத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும் இவர்களை மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியில்
ரஜினி
மற்றும்
கஸ்தூரி ராஜா
ஈடுபட்டு வருகின்றனர்.

இருபது நிமிடத்தில் அஜித்தின் சாதனையை முறியடித்த விஜய்..! இது வேற லெவல் பா..!

இந்நிலையில் சமூகத்தளங்களில் தனுஷ் சில நடிகைகளுடன் நெருங்கி பழகியதே இவர்களின் விவகாரத்திற்கு காரணம் என சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் தற்போது ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. அதாவது தனுஷின் தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ஒரு படத்தில் நடித்த நடிகை தனுஷிற்கு விடாது போன் செய்து பேசி வருகிறாராம்.

இதுபோக அந்த நடிகையின் விவாகரத்திற்கு தனுஷும் ஒரு காரணம் என கிசுகிசுக்கப்பட்ட நிலையிலும் அந்த நடிகை தனுஷிடம் நெருக்கம் காட்டுவதை விடவில்லையாம். தற்போது தனுஷிற்கு விவகாரத்தானதால் அவருக்கு ஆறுதலாக இருக்கவேண்டுமென அடிக்கடி போன் செய்து பேசி வருகிறாராம்.

ஆனால் தனுஷ் அந்த நடிகை போன் செய்தாலே பதறிவிடுகிறாராம் ஏற்கனவே பல பிரச்சனைகள் போய்க்கொண்டிருக்கிறது இதில் இது வேற புது பிரச்சனையா எனக்கருதி தனுஷ் அந்த நடிகையின் போனை தவிர்த்து விடுகிறார் என தகவல்கள் வந்துள்ளன. தற்போது தனுஷ் இந்த பிரச்சனைகளிலிருந்து தன்னை திசைதிருப்ப படங்களில் முழுக்கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து? எஸ் ஏ சந்திரசேகர் அறிவுரை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.