கொட்டகலையில் போதை வில்லைகள் விற்பனை: போலி வைத்தியர் கைது

தாம் வைத்தியர் என்று கூறிக்கொண்டு போதை வில்லைகளை விற்பனை செய்து வந்த ஒருவர் தலவாக்கலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்தியராகத் தோன்றி நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கி வந்ததாகவும் போதை வில்லைகளை விற்பனை செய்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இவரிடமிருந்து 338 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வில்லைகளை வாங்குவதற்காக வந்த இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பில் திம்புல-பத்தன பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.