கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு 12 வயது முதல் 18 வயதுடைய சிறுவர் சிறுமியர்க்கு செலுத்தலாம் – அமைச்சர் மான்சுக் மாண்டவியா <!– கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு 12 வயது … –>

கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு 12 வயது முதல் 18 வயதுடைய சிறுவர் சிறுமியர்க்கு செலுத்தலாம் என்று மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்குழு பரிந்துரை அளித்துள்ளது.

இதற்கான ஆவணங்களை விரைவில் தடுப்பூசி தயாரிக்கும் ஹைதரபாத்தை சேர்ந்த மருந்து நிறுவனம் அரசுக்கு அளிக்க உள்ளது.இதைத் தொடர்ந்து 2 டோஸ் தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்படும்.மத்திய அரசு 5 கோடி டோஸ்களை வாங்குவதற்கு ஆர்டர் போட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தடுப்பூசியின் விலை 145 ரூபாய் மற்றும் வரிகள் என்று கூறப்படுகிறது.

இதனிடையே 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட ஒன்றரை கோடி சிறுவர் சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.