தங்க நகைகள் அணியும் போது மிகவும் அவதானமாக இருங்கள்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை



மோட்டார் சைக்கிள் வரும் நபர்கள் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் செல்லும் சம்பவங்கள் நாட்டின் பல பிரதேசங்களில் பதிவாகியுள்ளன.

அந்த வகையில், கஹதுடுவ – அம்பலாங்கொட வீதியில் பயணித்த நபரொருவரின் கழுத்தில் இருந்த நகையை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.

இதனை அருகில் இருந்தவர் ஒருவரால் கையடக்கத் தொலைபேசியில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அக்மீமன பகுதியில் உள்ள கடையொன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பெண்ணொருவரின் கழுத்தில் இருந்த நகையை அறுத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்நிலையில், குறித்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.