புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் சாலையில் விதித்த கட்டுப்பாட்டை திரும்ப பெற முடியாது – உயர்நீதிமன்றம் கருத்து <!– புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் சாலையில் விதித்த கட்டுப்… –>

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் சாலையில் வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதித்த உத்தரவை திரும்பப் பெற அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது குறித்த வழக்கில், இரவில் சரணாலயப் பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதித்த ஆட்சியரின் உத்தரவை அமல்படுத்த உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது.

இவ்வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணையில், வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதித்ததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக  அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு, சரணாலயத்தில் உள்ள கிராமங்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் அல்லது அதனை புலிகள் சரணாலயம் அல்ல என அறிவிக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

டேராடூன் – ஹரித்வார் இடையே அமைக்கப்பட்டது போல் அங்கு மேல்மட்ட சாலை அமைக்கலாம் என்றும் நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.