இளையராஜா-கங்கை அமரன்: 13 வருடங்களுக்குப் பின் பேசிய அண்ணன்- தம்பி;பின்னணி இதுதான்! #VikatanExclusive

இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் இளைராஜா. அவரின் சகோதரர் இசையமைப்பாளர், இயக்குநர் கங்கை அமரன். கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த கரகாட்டக்காரன் உள்பட பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இதற்கிடையில் சில வருடங்களாக இளையராஜாவும் அவரின் சகோதரர் கங்கை அமரன் பேசிக் கொள்வதில்லை என்ற செய்திகள் வெளியாகின. தற்போது இளையராஜாவும், கங்கை அமரனும் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கங்கை அமரனின் மகனும் திரைப்பட இயக்குநருமான வெங்கட் பிரபு உள்ளிட்ட பலரும் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இளையராஜா-கங்கை அமரன்

இந்த நிலையில் 13 வருடங்களுக்குப் பிறகு அண்ணன் இளையராஜாவும் – தம்பி கங்கை அமரனும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். மிக்க சந்தோஷத்தில் இருந்த கங்கை அமரனிடம் பேசினோம்.

“அண்ணன் அழைப்பதாக போனில் சொன்னார்கள். நான் இவ்வளவு காலம் அதற்குத்தான் காத்திருந்தேன். உடனே போய் சந்தித்தேன். ஒன்றரை மணிநேரம் பேசிக்கொண்டு இருந்தேன். எந்தச் சண்டை சச்சரவுகளும் இல்லாமல் அருமையாகப் பேசிக்கொண்டு இருந்தார். இனிமேல் சந்தோஷமாக இணைந்திருப்போம். 13 வருடங்களாகப் பேசாமல் இருந்தது பெரும் துயரம். இனிமேல் அது போல் நேராது. எனக்கு இப்போது சந்தோஷமாக இருக்கிறது. மகிழ்ச்சியாக வீட்டுக்குப் போகிறேன்” என்றார் கங்கை அமரன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.