பயங்கரவாதிகளிடம் சிக்கி கொண்ட கணவன்: மீட்க காட்டுக்குள் சென்ற மனைவி


இந்தியாவில் சட்டிஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட தனது கணவரை தேடி மனைவி காட்டு பகுதிக்கு சென்று இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு தனியார் கட்டுமான கம்பெனியில் இன்ஜினீயராக பணிபுரிந்து வரும் அசோக் பவார் மற்றும் அவரது உதவியாளர் ஆனந்த் யாதவ் ஆகிய இருவரை
சட்டிஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் கடத்தியுள்ளனர்.

இந்த நிலையில், அவரது மனைவி சோனாலி பவார் தனது இரண்டு குழந்தைகள் உடன் இணைந்து, அசோக் பவரை விடுவிக்குமாறு மிகவும் உருக்கமான ஒரு வீடியோ பதிவை ஒன்றை வெளிட்டு கோரிக்கை விடுத்திருந்தார். 

இதனை தொடர்ந்து சோனாலி பவார் தனது கணவரை மீட்பதற்காக, உள்ளூர் செய்தியாளரின் உதவியுடன் தனது இரண்டரை வயது மகளுடன் அபுஜிஹ்மட் (abujhmad) காட்டுக்குள் சென்றுள்ளார்.

கணவர் தேடி சோனாலி காட்டுக்குள் சென்ற அதே வேளையில் அசோக் பவார் மற்றும் அவரது உதவியாளர் ஆனந்த் யாதவ் ஆகிய இருவரையும் பயங்கரவாதிகள் செய்வாய் அன்று மாலை விடிவித்துள்ளனர்.

இது குறித்து புதன்கிழமை உதவி காவல் கண்காணிப்பாளர் பங்கஜ் ஷுக்லா தெரிவிக்கையில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இருவரும் பத்திரமாக இருப்பதாகவும், சோனாலி இன்னும் உள்ளூர் பத்திரிகையாளருடன் தொடர்பில் இருப்பதாகவும் விரைவில் குற்று பகுதிக்கு வந்து சேர்வார் என தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.