காங்கிரஸ் அரசு எப்போதும் விவசாயிகளை ஏமாற்றியதற்கு வரலாறே சாட்சி – பிரதமர் பேச்சு <!– காங்கிரஸ் அரசு எப்போதும் விவசாயிகளை ஏமாற்றியதற்கு வரலாறே … –>

விளைபொருள் விலை நிர்ணயத்துக்கான சுவாமிநாதன் குழுப் பரிந்துரைகளை காங்கிரஸ் ஆட்சியில் கிடப்பில் போட்டதாகவும், பாஜக அரசு செயல்படுத்தியதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பஞ்சாபின் அபோகரில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நாட்டுப் பற்றுள்ள, மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறையுள்ள அரசு பஞ்சாபுக்குத் தேவை எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் எப்போதும் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது என்பதற்கு வரலாறே சாட்சியாகும் எனக் குறிப்பிட்டார்.

உத்தரப்பிரதேசம், பீகாரில் இருந்து பஞ்சாபுக்கு வருவோர் குறித்து சரண்ஜித் சிங் பேசிய கருத்துக்குப் பதிலளித்த பிரதமர், குரு கோவிந்த் சிங் பீகாரின் பாட்னா சாகிப்பில் பிறந்தவர் என்றும், குரு ரவிதாசர் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் பிறந்தவர் என்றும் குறிப்பிட்டார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.