கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி கேன்சர் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் சுப்பையா பணியிடை நீக்கம்!

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி புற்றுநோய் துறை தலைவரான ஏபிவிபிஐச் சேர்ந்த மருத்துவர் சுப்பையா பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக  மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இவரை ஏற்கனவே பக்கத்து வீட்டுவாசலில் சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி புற்றுநோய் துறை தலைவராகவும், பேராசிரியராகவும்  இருந்து வருபவர் மருத்துவர் சுப்பையா. இவர் பாஜகவின் மாணவர் பிரிவான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) தேசியத் தலைவராகவும் உள்ளார். இவர் அரசு ஊழியருக்கான நடத்தை விதியை மீறியதாக எழுந்த  புகாரில், அவரை இடைநீக்கம் செய்து மருத்துவர் கல்வி இயக்குநரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்மீதான துறை ரீதியான விசாரணை நடைபெறும் வரை பணியிடை நீக்கம் தொடரும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

ருத்துவர் சுப்பையா சண்முகம் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவக் குழுவில்  உறுப்பினராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஏபிவிபி டாக்டர் சுப்பையா மீது 3 பிரிவுகளில் வழக்கு….

மதுரை எய்ம்ஸ்  குழுவில் டாக்டர் சுப்பையாவை நியமனம் செய்தது மத்தியஅரசு!  அமைச்சர் விஜயபாஸ்கர் நழுவல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.