அடுத்த வாரம் பேச்சுவார்த்தை: ரஷ்யாவுக்கு கண்டிஷன் போட்ட அமெரிக்கா!

உக்ரைன்
எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனது படைகளை
ரஷ்யா
குவித்து வருகிறது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
அமெரிக்கா
தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், அதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த படைகள் குவிக்கப்பட்டன.

இதனால், உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரமும் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவுக்கு கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் அதற்கு நேட்டோ நாடுகள் ஆதரவு தெரிவிக்கும் எனவும், ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

அதன் தொடர்சியாக, நேட்டோ படைகள் கிழக்கு உக்ரைனில் குவிக்கப்பட்டன. இதனிடையே, அமெரிக்கா – ரஷ்யா இடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அவை அனைத்தும்ம் தோல்வியிலேயே முடிந்தன. கடைசியாக புடின் – பைடன் ஆகியோர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, சோவியத் வீழ்ச்சியின்போது போடப்பட்ட ஒப்பந்தந்தின்படி, உக்ரைனை நேட்டோவில் சேர்க்கக் கூடாது. அங்கிருந்து நேட்டோ படைகள் வெளியேற வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் திட்டவட்டமாக தெரிவித்தார்.

ரஷ்யா படையெடுத்தால்.. இந்தியா எங்கள் பக்கம் நிற்கும்.. அமெரிக்கா பரபர தகவல்!

அதேபோல், ராஜாங்க ரீதியிலேயே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா விருப்பம் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. இதனையடுத்து, உக்ரைனில் இருந்து சில படைகளை ரஷ்யா திரும்பப் பெற்றது. இதனால், போர் பதற்றம் தணிந்த நிலையில், எல்லையில் ரஷ்ய படைகள் இன்னும் இருப்பதாக குற்றம் சாட்டிய அமெரிக்கா, அவை திரும்பப் பெறப்பட வேண்டும் என வலியுறுத்தியது. மேலும், உக்ரைன் மீது இன்னும் சில நாட்களில் படையெக்க வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

இந்த சூழலில்,
உக்ரைன் விவகாரம்
தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சர்ஜி லவ்ரோவை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அண்டனி பிளிங்கன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும், அடுத்த வாரம் திட்டமிடப்பட்டிருந்த தேதியில் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கிடையே, உக்ரைன் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என ரஷ்யா தெரிவித்துள்ளது. மீறி தாக்குதல் நடத்தும் பட்சத்தில் பேச்சுவார்த்தை நடைபெறாது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்காமல் இருந்தால் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

முன்னதாக, உக்ரைனின் எல்லையோர மாகாணமான டான்பஸில் உள்ள ஸ்டைனிஸ்டியா லுகன்ஸ்கா என்ற நகரில்
குண்டு வீச்சு தாக்குதல்
நடைபெற்றது. இந்த மாகாணத்தின் ஒரு பகுதி உக்ரைன் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டைனிஸ்டியா லுகன்ஸ்கா அருகே உள்ள கிராமத்தில் குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலை யார் நடத்தியது என்று இன்னும் முழுமையான தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.