அதிமுக அடித்த அடியில்., சற்றுமுன் தேர்தல் ஆணையம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகராட்சிக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரி எஸ் நாகராஜனை நியமித்து, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவை மவ்வட்டதை கலவர பூமியாக்க திமுக திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த தேர்தலை நேர்மையாக நடத்த துணை இராணுவத்தை கொண்டு வரவேண்டும் என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில், அதிமுக எம்எல்ஏக்கள், இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், கோவை மாநகராட்சிக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளரை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, நில நிர்வாக ஆணையர் நாகராஜன், தற்போது கோவை மாவட்ட சிறப்பு தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கோவையில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துவதை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்யவும், மாநில தேர்தல் ஆணையம் அவருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.