மீனவ இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ; 3 பேர் நீதிமன்றத்தில் சரண், 4 பேர் கைது <!– மீனவ இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ; 3 பேர் நீதிமன்ற… –>

மாமல்லபுரம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மீனவர் குடியிருப்பைச் சேர்ந்த மணிமாறன் என்ற அந்த இளைஞர் 2 நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வியாழக்கிழமையன்று 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விக்னேஷ் என்பவனை கைது செய்த போலீசார், தொடர்ந்து சங்கர், ஸ்ரீதர், அப்துல் ஹமீது ஆகியோரையும் கைது செய்துனர்.

இதில் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்ற ஸ்ரீதரும் அப்துல் ஹமீதும் கீழே விழுந்ததில் அவர்களது கால் எலும்புகள் முறிந்து மாவுக் கட்டு போடப்பட்டுள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.