54 செயலிகளுக்கு தடை சீன அரசு கவலை| Dinamalar

பீஜிங்:சீனாவை சேர்ந்த, 54 ‘மொபைல் போன்’ செயலிகளுக்கு, இந்திய அரசு தடை விதித்துள்ளது குறித்து, சீனா கவலை தெரிவித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் மொபைல் போன் செயலிகளுக்கு, மத்திய அரசு தடை விதித்து வருகிறது.கடந்த ஆண்டு ஜூன் மாதம், ‘டிக்டாக்’ உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட சீன மொபைல் போன் செயலிகளுக்கு, மத்திய அரசு தடை விதித்தது.

இந்நிலையில், மேலும் 54 செயலிகளுக்கு, சமீபத்தில் தடை விதித்தது. இது குறித்து, சீன வர்த்தக அமைச்சக செய்தி தொடர்பாளர் கவோ பெங் கூறுகையில், ”பாதுகாப்பு காரணங்களுக்காக, சீனாவை சேர்ந்த, 54 மொபைல் போன் செயலிகளுக்கு, இந்திய அரசு தடை விதித்துள்ளது கவலை அளிக்கிறது.

”சீனா உட்பட அனைத்து வெளிநாட்டு முதலீட்டாளர்களையும், வெளிப்படையாகவும், நியாயமாகவும், பாரபட்சமின்றியும் இந்திய அரசு நடத்தும் என நம்புகிறோம்,” என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.