'அகமதாபாத் குண்டுவெடிப்பு: சமாஜ்வாடி தலைவர்களுக்கு தொடர்பு!' – மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு!

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர்களுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக மத்திய அமைச்சர் அனுதாக் தாக்குர் குற்றம் சாட்டி உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர்
யோகி ஆதித்யநாத்
தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்ற நிலையில், நாளை மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் மாதம் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்
அனுராக் தாக்குர்
செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பயங்கரவாதம் எனும் வரும்போது, பாஜகவின் நோக்கம் மற்றும் எண்ணம் எப்போதும் பூஜ்ய சகிப்புத்தன்மையுடனேயே உள்ளது. சமாஜ்வாடி பயங்கரவாதத்திற்கு முழு பாதுகாப்பு அளிக்கும் நிலைப்பாட்டை எடுக்கும். ஆமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம், மரணம் அடைந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் ஆகியவற்றை பற்றி நான் பேச வேண்டுமெனில், அதில் சமாஜ்வாடி தலைவர்களுக்கு நேரடியான தொடர்புகள் உள்ளன.

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில், 49 குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றம் தண்டனை அறிவித்து உள்ளது. அவர்களில் 38 பேருக்கு மரண தண்டனையும், 11 பேருக்கு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது. இதனை நான் வரவேற்கிறேன். இதன் பின்னர் அனுராக், புகைப்படம் ஒன்றை செய்தியாளர்களிடம் காட்டினார். அதனை குறிப்பிட்டு, இந்த படத்தில் உள்ள முகமது சைப், சமாஜ்வாடி தலைவர் ஷதாப் அகமதுவின் மகன். இவர் 49 பேரில் ஒருவர். இதுபற்றி அகிலேஷ் ஏன் அமைதியுடன் உள்ளார்?

முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் உடன் அவர் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் உள்ளன. பிரியாணி சாப்பிடுவதற்காக அவரை அகிலேஷ் அழைத்துள்ளாரா? தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில், அகமதுவின் மகன் பின்புலத்தில் இருந்து செயல்பட்டு உள்ளார். அவருக்கும் தொடர்புகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.