சிறப்பு விடுமுறை – அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்!

சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க வசதியாக வரும் 20 ஆம் தேதி மட்டும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர்
சரண்ஜித் சிங் சன்னி
தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, வரும் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

முதலில், 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி உள்ளிட்டோர் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியதை அடுத்து, 20 ஆம் தேதிக்கு வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில், மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், காங்கிரஸ் கட்சி படுதீவிரமாக செயலாற்றி வருகிறது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புதுக்கட்சியைத் தொடங்கி உள்ள கேப்டன் அமரீந்தர் சிங், பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.

இந்நிலையில், பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அன்றைய ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும்,
அரசு ஊழியர்கள்
வாக்களிக்க ஏதுவாக அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய சிறப்பு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள், தங்களது ஊழியர்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றும் வகையில், அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கும்படி, மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.