நாடு முழுவதும் 22,270 பேருக்கு கரோனா தொற்று; பரவல் 14% குறைந்தது

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,270 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்றைய தொற்று எண்ணிக்கையை ஒப்பிடுகையில் இன்று 14% குறைந்துள்ளது.

நாடுமுழுவதும் கரோனா பரவல் குறித்த கடந்த 24 மணி நேர நிலவர அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,270 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்றைய தொற்று எண்ணிக்கையை ஒப்பிடுகையில் இன்று 14% குறைந்துள்ளது.

* அன்றாட பரவல் (பாசிடிவிட்டி) விகிதம் 1.8% என்றளவில் உள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் 60298 பேர் காரோனாவில் இருந்து குணமடைந்தனர்.

* இதுவரை கரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை: 4,20,37,536.

* சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,53,739 ஆக உள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழந்தனர்.

* கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,11,230.

* இதுவரை நாடு முழுவதும் 175.03 கோடி டோஸ்கள் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.