பொண்ணுக்கு அம்மாவாக இருப்பது எவ்வளவு கடினம்… காமெடியன் மதுரை முத்துவின் கண்ணீர் வாழ்க்கை

Tamil Reality Show Update : ரசிகர்களுக்கு பிடித்தமான ரியாலிட்டி ஷோக்களை வழங்குவதில் எங்களை அடித்துக்கொள்ள யாரும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் விஜய் டிவி காலம் காலமாக ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறது. வார நாட்களில் சீரியல் மற்றும் வார இறுதி நாட்களில் ரியாலிட்டி ஷோக்கள் என ரசிகர்களின் ரசனைக்கேற்ப நிகழ்ச்சிகளை தருவதில் விஜய் டிவி முன்னணியில் இருந்து வருகிறது.

அதேபோல், விஜய் டிவி ஹாஸ்டாருடன் இணைந்துவிட்டதால், டிவியில் பார்க்க முடியாத ரசிகர்கள் கூட தங்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சியை ஹாஸ்டரில் கண்டு ரசித்து வருகின்றனர். இதற்காகவே ரசிகர்கள் மத்தியில் விஜய் டிவிக்கு தனி இடம் உண்டு. சீரயல்கள் மூலம் இல்லத்தரசிகளையும், ரியாலிட்டி ஷோக்கள் மூலம் இளைஞர்களையும் கவரும் விஜய் டிவி டிஆர்பியிலும் முன்னணியில் இருந்து வருகிறது.

இதில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக வார இறுதியில் ஒளிபரப்பாகும், சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர், பிக்பாஸ் ஜோடிகள, ஸ்டார்ட் மியூசிக், குக் வித் கோமாளி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகின்றனர். அந்த வகையில் சமீத்தில் தொடங்கப்பட்டது சூப்பர் டாடி நிகழ்ச்சி.  

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் தங்களது குழந்தைகளுடன் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில், வாரா வாரம் வழங்கப்படும் டாஸ்க்குகளை சரியாக செய்ய தவறுபவர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அப்படி ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நிகழ்ச்சிக்காக இந்த வார ப்ரமோ வெளியிடப்பட்டு்ளளது.

அசத்தப்போவது யார் என்ற நிகழ்ச்சி மூலம் மக்களை சிரிக்கவைத்த காமெடி நடிகர் மதுரை முத்து தனது மகளுடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளர். இந்த ப்ரமோவில் தனது முதல் மனைவி குறித்து பகிர்ந்துகொள்ளும் மதுரை முத்து, கூறுகையில் ஒரு குழந்தைக்கு அப்பாவாகவும், அம்மாவாகவும் இருப்பது எவ்வளர் கஷ்டம் என்பதை என் முதல் மனைவி இறந்த பின் உணாந்தவன் நான். எனது பெண் குழந்தை பாத்ரூம் போய்விட்டு வரும்பொது ஜிப் போட வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது வேறு வழியின்றி, வேறு ஒருவரின் மனைவியை கூப்பிட்டு என் பொண்ணுக்கு உதவ சொல்வேன் என்று சொல்லும் மதுரை முத்து கண்ணீர் மல்க இதுபோன்ற பல நெருங்கடிகளை சந்தித்துள்ளதாக கூறியுள்ளார்.

மதுரை முத்துவின் இந்த கண்ணீரை பார்த்த சக போட்டியாளர்கள் மற்றும் நடுவர்கள் அனைவரும் கண்ணீர் விடுகின்றனர். எப்போதும் கலகலப்பாக இருந்து அடுத்தவர்களை சிரிக்கவைக்கும் மதுரை முத்து கண் கலங்கியிருப்பது ரசிகர்கள் மத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்களை சிரிக்கவைக்கும் கலைஞர்கள் அனைவரின் பின்னாலும் ஒரு சோகம் இருக்கதான் செய்கிறது என்று கூறி வருகினறனர்.   

எப்போதும் கலகலப்பாக இருக்கும் மதுரை முத்து அழுதிருப்பது இந்த வீடியோவை பார்க்கும் அவரது ரசிகர்களையும் கண்கலங்க செய்து உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.