ரஷ்யா – உக்ரைன் போர் மூண்டால்… – ஐ.நா., கடும் எச்சரிக்கை!

ரஷ்ய – உக்ரைன் போர் மூண்டால் உலக நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்து உள்ளார்.

1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை கண்ட போது, அதில் இருந்து வெளியேறி சுதந்திர நாடாக உக்ரைன் உருவானது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இதனால் உக்ரைனை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர ரஷ்யா முயன்று வருகிறது.

அதே வேளையில் உக்ரைன் தன்னை ஐரோப்பிய நாடாகவே காட்டிக் கொள்ள விரும்புகிறது.
அமெரிக்கா
தலைமையிலான நேட்டோவில் இணைய உக்ரைன் முயன்று வருகிறது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இந்தச் சூழலில் எல்லையில் ரஷ்யா படைகளைக் குவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘உக்ரைன் மீது விரைவில் தாக்குதல்!’ – அமெரிக்க அதிபர் பைடன் எச்சரிக்கை!

அண்மையில், ஐக்கிய நாடுகள் சபைத் தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் முனீச் பாதுகாப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் ரஷ்யா சார்பாக யாரும் கலந்து கொள்ளாத நிலையில் ரஷ்ய – உக்ரைன் எல்லை போர் மிகவும் ஆபத்தானது என்று அவர் கருத்து தெரிவித்து உள்ளார். ரஷ்யா – உக்ரைன் போர் துவங்கினால் இது உலக நாடுகளுக்கு மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.