வீடு, வீடாக தேடிச்சென்று வாக்காளர்களுக்கு தங்க மூக்குத்திகள் : அதிமுகவினர் இருவர் கைது

திருவள்ளூர்:  திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு அதிமுக வேட்பாளர் சுமித்ரா வெங்கடேசனின் ஆதரவாளர்கள் நேற்று வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு தங்க மூக்குத்திகள் வழங்கினர். தகவலறிந்த திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்ம பபி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது, வாக்காளர்களுக்கு தங்க மூக்குத்திகளை வழங்கி வந்த பாரி, ராகுல் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து தங்க மூக்குத்திகளை பறிமுதல் செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.