175 கோடி டோஸ் தடுப்பூசியில் புதிய சாதனை| Dinamalar

புதுடில்லி:நாட்டில், 18 வயது கடந்தோரில் 80 சதவீதம் பேருக்கு, இரு ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து விரைவாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம், 36.28 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதுடன், இதுவரை செலுத்திய டோஸ் 175.03 கோடியாக உயர்ந்து உள்ளது. இதன்படி, 18 வயதிற்கு மேற்பட்டோரில் 96.5 சதவீதம் பேர் முதல் டோஸ் மற்றும் 80 சதவீதம் பேர் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர்.
இதுகுறித்து, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் நேற்றைய சமூக வலைதள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:தற்போது, 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் இரு டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இந்த எண்ணிக்கை 100 சதவீதத்தை நோக்கி விரைவாக செல்கிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.