அரகண்டநல்லுாரில் 5:00 மணிக்கு | Dinamalar

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் பேரூராட்சியில் 81.59 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லுார் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளது. இதில், ஒரு வார்டில் தி.மு.க., வேட்பாளர் அன்பு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து நேற்று 11 வார்டுகளுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது.

மொத்தம் 4,498 வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றிருந்தனர். மாலை 5:00 மணி நிலவரப்படி 3,670 பேர் ஓட்டளித்து இருந்தனர். இது 81.59 சதவீதமாகும்.மாலை 5:00 மணியிலிருந்து 6:00 மணிவரை கொரோனா பாதித்தவர்கள் ஓட்டு போடுவதற்கான நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், ஒரு சில வார்டுகளில் வாக்காளர்கள் வரிசையில் இருந்ததால் 5:00 மணிக்கு மேல் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதன் காரணமாக ஓட்டுப்பதிவு சதவீதம் மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.